திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பறிமுதல் 

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்காவை வைத்து விற்பனையில் ஈடுபட்ட சிவகுமார் என்பவரை போலீஸார் கைது
திருச்சி மலைக்கோட்டை பகுதியில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ குட்கா பறிமுதல் 


திருச்சி: திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்காவை வைத்து விற்பனையில் ஈடுபட்ட சிவகுமார் என்பவரை போலீஸார் கைது விசாரணை நடத்தி வருகின்றனர். 

திருச்சி மலைக்கோட்டை பகுதியில் இருசக்கர வாகனத்தில் குட்காவை வைத்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் சோதனையில் ஈடுபட்டபோது, இருசக்கர வாகனத்தில் குட்காவை வைத்து விற்பனையில் ஈடுபட்ட சிவகுமார் என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள 50 கிலோ குட்காவையும் பறிமுதல் செய்தனர். 

இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி சித்ரா தலைமையிலான குழுவினர் விசாரணை சிவகுமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com