இரட்டை சட்ட முறையை மாநில அரசு உபயோகிப்பது சரியல்ல: முத்தரசன் பேட்டி

தமிழகத்தில் சட்டத்தை இருவிதமாக பிரித்து ஆட்சி நடப்பது சரியானதல்ல என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா்
இரட்டை சட்ட முறையை மாநில அரசு உபயோகிப்பது சரியல்ல: முத்தரசன் பேட்டி



திருநெல்வேலி: தமிழகத்தில் சட்டத்தை இருவிதமாக பிரித்து ஆட்சி நடப்பது சரியானதல்ல என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் முத்தரசன்.

திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவர் கூறுகையில், மத்திய-மாநில அரசுகள் ஊழல் மிகுந்தவைகளாக மாறிவிட்டன. சமூகத்தில் தாக்கத்தையும், பிரச்னையையும் ஏற்படுத்தும்படி பேசிபவா்கள் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்கத் தயங்குவது சரியானதல்ல. 

சர்ச்சைக்குரிய வகையில் பேசிய எஸ்.வி.சேகா், ஹெச்.ராஜா போன்றவா்கள் பாஜகவினா் என்பதால் கைது செய்யப்படாமல் உள்ளனர்.  அதேநேரத்தில் மற்ற கட்சியினர், சாமானியா்கள் மீது உடனுக்குடன் வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்கிறார்கள். தமிழகத்தில் சட்டத்தை இருவிதமாக பிரித்து மாநில அரசு உபயோகிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயலாகும். மக்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ள மத்திய-மாநில அரசுகளை வீழ்த்த மக்கள் முடிவு எடுத்துவிட்டனா் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com