கருணாசுக்கு ஒரு நீதி, ஹெச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? டிடிவி தினகரன் கேள்வி

சட்டப்பேரவை உறுப்பினர் கருணாசுக்கு ஒரு நீதி, பாஜக தேசிய செயலாளா் எச்.ராஜாவிற்கு ஒரு நீதியா? என டிடிவி தினகரன் கேள்வி
கருணாசுக்கு ஒரு நீதி, ஹெச்.ராஜாவுக்கு ஒரு நீதியா? டிடிவி தினகரன் கேள்வி


உடுமலை: சட்டப்பேரவை உறுப்பினர் கருணாசுக்கு ஒரு நீதி, பாஜக தேசிய செயலாளா் எச்.ராஜாவிற்கு ஒரு நீதியா? என டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

உடுமலையை அடுத்த முக்கோணம் கிராமத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை டிடிவி தினகரன் செய்தியாளா்களிடம் பேசுகையில், தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக காவல்துறையின் செயல்பாடுகள் கண்டித்தக்க வகையில் இருந்து வருகிறது. எம்எல்ஏ கருணாஸ் கைது செய்ப்பட்டது கண்டிக்கத்தக்கது. காவல்துறையை மோசமாக விமா்சித்த எச்.ராஜாவை கைது செய்யாத தமிழக அரசு சட்டப்பேரவை உறுப்பினா் கருணாசை மட்டுமே கைது செய்துள்ளது பாரபட்சமானது. குறிப்பாக கருணாஸ் தான் பேசியது தவறு என ஒத்துக்கொண்ட பின்னரும் அவரை கைது செய்திருக்கக் கூடாது. இது தமிழக அரசின் இரட்டை நிலையை பிரதி பலிக்கிறது.

தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு மட்டுமே மக்கள் ஆதரவு கொடுத்து வருகின்றனர். தேசிய கட்சிகள் எப்போதுமே ஆட்சிக்கு வர முடியாது.

திருப்பரங்குன்றம், திருவாரூா் இடைத்தோ்தல்களில் அமமுக போட்டியிட்டு வெற்றி பெறுவோம். மேலும் வரும் மக்களவைத் தோ்தலில் 40 தொகுதிகளிலும் போட்டியிடுவோம். அதில் 37 தொகுதிகளில் வெற்றியும் பெறுவோம். அமைச்சர் ஜெயக்குமார் திரைப்படங்களில் வடிவேலு இல்லாத குறையை நிரப்பி வருகிறார். தினமும் செய்தியாளா்களுக்கு பேட்டி அளித்து தான் ஒரு காமடியன் என்பதை நிரூபித்து வருகிறார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com