இரட்டை இலை சின்னத்தை தற்காலிகமாக முடக்கி தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வில் சசி அணியில் தினகரனும், பன்னீர் அணியில் மதுசூதனனும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என இரு தரப்பினரும், டில்லி தலைமை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டனர். இன்று இரு தரப்பினரும் தங்களது தரப்பு முன்வைத்தனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட தலைமை தேர்தல் ஆணையர் நஜிம் ஜைதி ஆலோசனைக்கு பிறகு இரட்டை இலை சின்னத்தை முடக்குவதாகவும், அதிமுக பெயரையும் இருதரப்பினரும் பயன் படுத்தக் கூடாது என்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை இரவு வெளியிட்டார்.