சிறுமி ஹாஸினி கொலை வழக்கில் சிக்கிய தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னை அருகே சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறுமி ஹாஸினி கொலை வழக்கில் சிக்கிய தஷ்வந்த் குண்டர் சட்டத்தில் கைது!

சென்னை அருகே சிறுமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட நபர், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
போரூர் அருகே உள்ள மதனந்தபுரம் மாதா நகர் 10ஆவது தெருவைச் சேர்ந்தவர் சே.தஷ்வந்த் (22).
இவர், கடந்த மாதம் தனது வீட்டின் அருகே வசித்த ஒரு 7 வயது சிறுமி ஹாஸினியை, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தார். அப்போது அந்த சிறுமி அலறியதால், தஷ்வந்த் அந்த சிறுமியை கொலை செய்தார்.
இதுகுறித்து மாங்காடு போலீஸார் வழக்குப்பதிவு செய்து, தஷ்வந்தை கைது செய்தனர். இந்நிலையில், தஷ்வந்தை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, சிறையில் அடைக்க சென்னை பெருநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் உத்தரவிட்டார்.
அந்த உத்தரவின்படி, தஷ்வந்த் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் புதன்கிழமை அடைக்கப்பட்டார்.
இதேபோல, திருட்டில் தொடர்ந்து ஈடுபட்டு வந்த புதுச்சேரி முத்தையால்பேட்டை சோலைநகரைச் சேர்ந்த பி.ஜார்ஜ் (49), என்பவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com