அறியாக்குழந்தைகளை அம்மாவாக்கும் அசிங்கமான ஜென்மங்களை எல்லாம் துள்ளத் துடிக்க கழுவேற்றினால் ஒழிய சிறார் வன்முறை ஒழியாது!
- என்றெல்லாம் நாம் குழந்தைகளுக்கெதிரான பாலியல் குற்றவாளிகளைக் கடுமையாக நிந்திக்கலாம். அவர்களை நிந்திப்பதில் தவறே இல்லை, ஆனால் அதற்கெல்லாம் முன்பு நாம் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்றுண்டு; நம் வீட்டுக் குழந்தைகளின் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை நாம் முழுமையாகச் செய்திருக்கிறோமோ? என்பது தான் அது! ஒவ்வொரு பெற்றோரும் இந்தக் கேள்வியை தங்களுக்குள் பலமுறை கேட்டுப்பாருங்கள். கிடைக்கும் விடை உங்களுக்கே திருப்தியாக இருந்தால் சரி. இல்லையேல், இந்த விஷயத்தில் நீங்கள் கண்டிப்பாகக் கவனம் செலுத்தியே ஆக வேண்டியவர்களாவீர்கள்.
எக்காரணத்தை முன்னிட்டும் குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் ‘கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்’ என்பதாக ஆகி விடக்கூடாது.
தொட்டுப் பேசுதல் என்பது தமிழர் நாகரீகம் அல்ல!
இறுதியாக ஒரு விஷயம்...
குழந்தைகள் சொந்த உறவினர்களால் தவறாக நடத்தப்படுகிறார்கள், முறைகேடான உறவுகளுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் எனில்; அத்தகைய குழந்தைகளுக்கு குடும்பத்தில் போதிய கவனம் செலுத்தப்படவில்லை என்று தான் அர்த்தம்.
குழந்தைகளைப் பெற்றுக் கொள்வதைக் காட்டிலும் மிக முக்கியமானது அவர்களை எந்த விதமான ஆபத்துகளும் அண்டாமல் பாதுகாப்பது.
அந்தக் கடமை யாருடையது? பெற்றோர்களுடையது தானே! பெற்றோர் இல்லாத பட்சத்தில் அந்தக் கடமை நெருங்கிய உறவினர்களுடையதாகிறது. நெருங்கிய உறவினர்களே கயவர்களாயிருக்கும் பட்சத்தில் அத்தைகைய குழந்தைகளின் நிலை என்ன? உபாயம் சொல்கிறோம் என சிலர் அரசுக்காப்பகங்களில் சேர்க்கச் சொல்லலாம். அங்கேயும் முறைகேடுகள், பாலியல் வன்முறைகள் நடக்காமலா இருக்கின்றன. மொத்தத்தில் இந்த உலகில் பெற்றோரின் அரவணைப்பு இல்லாத குழந்தைகளுக்கு முற்றிலுமாகப் பாதுகாப்பே இல்லை என்பது தான் உண்மை. சட்டங்கள் மனிதனைத் திருத்தவல்லவை அல்ல.
திருமணம் என்ற பெயரில் வளைகுடாக் கிழவருக்கு விற்கப்பட்ட இந்தியச் சிறுமியின் அவலக் கதை!
குழந்தைகளை நேசிப்பவர்கள், கட்டாயம் சாலை விதிகளைப் புறக்கணிக்க மாட்டார்கள்!
மாதவிடாய் நாட்களை வலியின்றி கடக்கப் பெண்கள் என்ன செய்ய வேண்டும்?!
பெற்றோரது சீரற்ற நடத்தையால் சிக்கலுக்கு உள்ளாகும், மகள்களின் தாம்பத்ய வாழ்க்கை?