முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் நினைவிடம், முன்னாள் முதல்வர்களுக்கு கிடையாது: எஸ். குருமூர்த்தி!

மெரினாவில் முதல்வராக இருக்கும் போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது.
முதல்வர்களுக்கு மட்டுமே மெரினாவில் நினைவிடம், முன்னாள் முதல்வர்களுக்கு கிடையாது: எஸ். குருமூர்த்தி!

திமுக தலைவர் கருணாநிதிக்கு மெரினாவில் இடம் அளிக்கக் கூடாது. இந்த விஷயத்தை திமுகவினர் தேவையில்லாமல் அரசியலாக்கக் கூடாது. அவருக்கு மெரினாவில் இடமளிப்பது நடைமுறையில் இல்லை.

முதல்வராக இருக்கும்போதே மரணம் அடைந்தவர்களுக்கு மட்டுமே மெரினாவில் இடமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மட்டுமே அங்கு இடமளிக்கப்பட்டுள்ளது. இதனால் கருணாநிதிக்கு அங்கு இடமளிக்க முடியாது.

முன்னாள் முதல்வர்களுக்கு காந்தி மண்டபத்திலேயே இடமளிக்கப்படுவது வழக்கம். காமராஜர், ராஜாஜி ஆகியோருக்கு மெரினாவில் இடமளிக்கப்படவில்லை. அதனால் கருணாநிதிக்கும் மெரினாவில் இடமளிக்க கூடாது என  துக்ளக் இதழின் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com