நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக தேர்தல் பிரசாரம் தொடக்கம்

நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் இன்று பிற்பகல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.

நெல்லித்தோப்பு தொகுதியில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் இன்று பிற்பகல் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
நெல்லித்தோப்பு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் முதல்வர் நாராயணசாமியும், அதிமுக சார்பில் ஓம்சக்தி சேகரும் போட்டியிடுகின்றனர். நாராயணசாமி ஏற்கெனவே கடந்த 21-ம் தேதி முதல் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகர் வெள்ளிக்கிழமை வேட்புமனுத் தாக்கல் செய்தார். அதன் பின்னர் நெல்லித்தோப்பு தொகுதியின் சனி மூலையாக கருதப்படும் பிள்ளைத்தோட்டம் ஆனந்தமுத்துமாரியம்மன் கோயில் அருகே இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.
திருவளளுவர் சாலையிலும் வீடு வீடாகச் செனறு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரித்தார். தமிழக அமைச்சர்கள் சிவி.சண்முகம், எம்.சி.சம்பத், எஸ்.செம்மலை எம்.எல்.ஏ., கோகுலகிருஷ்ணன் எம்.பி., முன்னாள் எம்.பி. சொரத்தூர் ராஜேந்திரன், புதுவை மாநில செயலாளர் பி.புருஷோத்தமன், அசனா எம்.எல்.ஏ. மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.
சனிக்கிழமை தீபாவளி பண்டிகை ஆதலால் பிரசாரப்பணி நிறுத்தப்படும். மீண்டும் ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் எனத்தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com