புதுச்சேரி விற்பனைக் குழு ஊழியர்கள் கூட்டுப் போராட்டக் குழு கஞ்சி காய்ச்சும் போராட்டம்

ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள 4 மாத  சம்பள தொகையையம்,  போனஸ் தொகையையும் உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை...

ஊழியர்களுக்கான நிலுவையில் உள்ள 4 மாத  சம்பள தொகையையம்,  போனஸ் தொகையையும் உடனே வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி விற்பனைக் குழு ஊழியர்கள் கூட்டுப் போராட்டக்குழு சார்பில் தட்டாஞ்சாவடியில் உள்ள விற்பனைக்குழு அலுவலகம் முன்பு இன்று கஞ்சி காய்ச்சும் போராட்டம் நடைபெற்றது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் உள்ள விற்பனைக் குழுவில் மொத்தம் 174 ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். விற்பனைக் குழுவின் செயலர், அரசாணை மற்றும் விதிகளை மதிக்காமல் செயல்பட்டு வருகின்றார் என்று புகார் கூறிய அவர்கள்,குழு வருவாய் மற்றும் ஊழியர்களின் ஊதியங்களை வழங்காமல் பல்வேறு முறைகேடுகள் புரிந்துள்ளனர்.
ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள  கடந்த 4 மாத ஊதியத்தையும்,வாங்க வேண்டிய போனஸ் தொகையையும் உடனடியாக வழங்கக்கோரி, தட்டாஞ்சாவடியில் உள்ள விற்பனைக்குழு அலுவலகம் முன்பு காஞ்சி காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உடனடியாக தங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை என்றால் ஆளுநர் மாளிகை முன்போ அல்லது, முதல்வர் நாராயணசாமியின் வீட்டு முன்போ குடும்பத்துடன் உண்ணாவிரதம் மேற்கொள்ளப்போவதாக எச்சரித்தனர்.
மேலும் போராட்டத்தின் போது சம்பளம்வ, போனஸ் வழங்ககோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com