கர்நாடக சட்டப் பேரவை சிறப்பு கூட்டம்: உச்சநீதிமன்றத்திற்கு எதிராக ஆவேசமாக பேச வேண்டாம் என சபாநாயகர் அறிவுறுத்தல்

காவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும்

காவிரியிலிருந்து கூடுதல் நீரை தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 20-ம் தேதி தீர்ப்பளித்தது.

இதனை ஏற்க மறுத்துள்ள கர்நாடக அரசு உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக, தீர்மானம் நிறைவேற்ற கர்நாடக சட்டப்பேரவையின் இரு அவைகளின் கூட்டு கூட்டத்தை இன்று கூட்டியுள்ளது.

பேரவை சிறப்புக் கூட்டம் தொடங்கியதும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக உறுப்பினர்கள் யாரும் ஆவேசமாக கடுமையான வார்த்தைகளில் பேச கூடாது என சபாநாயகர் கே.பி.கோலிவாட் அறிவுறுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com