'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்' கவிதைப் போட்டி

சென்னையிலுள்ள அமெரிக்க துணை தூதரகம் (The U.S. Consulate General in Chennai) பிரகிருதி பவுண்டேஷனுடன் இணைந்து
'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்' கவிதைப் போட்டி

சென்னையிலுள்ள அமெரிக்க துணைத் தூதரகம் (The U.S. Consulate General in Chennai) பிரகிருதி பவுண்டேஷனுடன் இணைந்து, 'இன்றைய சென்னை அன்றைய மெட்ராஸ்’ எனும் தலைப்பில் கவிதைப் போட்டியொன்றை நேற்று (ஆகஸ்ட் 22, 2017), நடத்தியது. 
 
சென்னை, லயோலா கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், 60-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் பங்கேற்று ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழியில் கவிதை வாசித்தனர். இப்போட்டியின் நடுவர்களாக ஈஷ்வர் கிருஷ்ணன், வசந்த், சல்மா, கவிதா முரளிதரன் மற்றும் அமெரிக்க துணைத் தூதரகத்தின் கலாசார அதிகாரி எரிக் லண்ட் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கவிதைப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் விபரம்:

வயது 16 - 21 (ஆங்கிலம்) :
முதல் பரிசு : மதுமிதா. பி (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)
இரண்டாம் பரிசு : யக்னா (நுங்கம்பாக்கம் M.O.P. வைஷ்ணவ் கல்லூரி)

வயது 16 - 21 (தமிழ்) :
முதல் பரிசு : சிவப்பிரகாசம் (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : அருண்கோகுல்.பி (லயோலா கல்லூரி) / டி. பானுப்ரியா (எத்திராஜ் கல்லூரி)

வயது 22 - 26 (ஆங்கிலம்) :
முதல் பரிசு : ஆதித்யா மோகன் (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : ஹரிணிவாசினி. ஜி (SDNB வைஷ்ணவ் கல்லூரி)

வயது 22 - 26 (தமிழ் ) :
முதல் பரிசு : ராஜேஷ் பச்சையப்பா (திறந்தவெளி வகை)
இரண்டாம் பரிசு : M.S. பிரீத்தி (எத்திராஜ் கல்லூரி)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com