இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் இடியுடன் கூட கனமழை பெய்து வருகிறது. இரவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
விடுமுறை தினங்களுடன் மழையையும் சேர்த்து மக்கள் கொண்டாடும்படி அமைந்திருந்தது இந்த மழையின் துவக்கம். ஆனால் நள்ளிரவிலிருந்து அதிகாலை வரை இடியுடன் கூடிய மழை பெய்துவந்ததால் மக்கள் கடந்த வருட நினைவுகளில் சற்று அச்சத்துடன் தான் மழையை எதிர்கொள்கின்றனர்.
அண்ணாசாலை, வண்டலூர், பெருங்களத்தூர், பம்மல், தாம்பரம், வேளச்சேரி, கிண்டி, மூலக்கடை, ஈக்காட்டுதாங்கல், போரூர், மடிப்பாக்கம், மதுரவாயல், ஆதம்பாக்கம், நுங்கம்பாக்கம், சிட்லபாக்கம், ஈஞ்சம்பாக்கம், கத்திப்பாரா, வடபழனி, அம்பத்தூர் உள்ளிட்ட பல இடங்களில் மழை பெய்து வருகிறது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சாரலுடன் மிதமான மழை நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் சில இடங்களில் மாலை அல்லது இரவு நேரங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.