தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க
தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் விடுவிக்கக் கோரிக்கை

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் உடனடியாக விடுவிக்க தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய தேசிய மீனவர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து இந்திய தேசிய மீனவர் சங்கத் தலைவர் ஆர்.எம்.பி. ராஜேந்திரநாட்டார், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலாளர்களுக்கு அனுப்பிய கோரிக்கை மனுவின் விவரம்:
இலங்கைக் கடற்படையின் அத்துமீறல் காரணமாக, உயிரையும், உடைமைகளையும், தொழிலையும் இழந்து தமிழக மீனவர்கள் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய மீனவர்கள் எல்லைத்தாண்டி மீன்பிடிப்பில் ஈடுபட்டால் ரூ. 20 கோடி அபராதம் விதிக்கப்படும், சிறை தண்டனை விதிக்கப்படும் என இலங்கை அரசு அறிவித்திருப்பது தமிழக மீனவர்களின் வேதனையை மேலும் அதிகரிக்கச் செய்வதாக உள்ளது. மேலும், சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளை விடுவித்து இலங்கை அரசு அறிவிப்பு வெளியிட்டும், படகுகளை மீட்டுக் கொண்டுவர தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநில அரசுகள் போதுமான நடவடிக்கை எடுக்கவில்லை என வெளியாகும் தகவல்கள், அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.

இதுகுறித்து தமிழக அரசும், புதுச்சேரி அரசும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொண்டு,  இலங்கை அரசு சிறைபிடித்துள்ள தமிழக மீனவர்களின் 148 விசைப் படகுகளையும், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 75-க்கும் அதிகமான மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும்.

படகுகளை மீட்டுக் கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டால், தொடர்புடைய படகுகளின் உரிமையாளர்களுக்கு முழு மானியத்தில் புதிய விசைப்படகுகளை வழங்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com