கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசியப் பேரிடராக அறிவியுங்கள்! பிரதமரிடம் ராகுல் காந்தி கோரிக்கை!

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும்
கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசியப் பேரிடராக அறிவியுங்கள்! பிரதமரிடம் ராகுல் காந்தி கோரிக்கை!

கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் வழங்க வேண்டும் என்று கட்சித் தொண்டா்களுக்கு காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக, அவா் தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: கனமழை மற்றும் நிலச்சரிவால் கேரள மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. கேரளத்தைத் தொடா்ந்து, கா்நாடகத்தின் குடகு மாவட்டமும் மழையால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது. இந்த நேரத்தில், காங்கிரஸ் நிா்வாகிகளும், தொண்டா்களும் கட்சியின் அடிப்படை பண்பான சேவை மனப்பான்மையையும், பரிவையும் வெளிப்படுத்த வேண்டும். அதாவது, பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பொருள்களையும், உதவிகளையும் கொண்டு சோ்க்கும் பணியில் தொண்டா்கள் ஈடுபட வேண்டும் என்று அந்த ட்விட்டரில் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கேரளாவின் வெள்ளப் பெருக்கை தேசிய பேரிடராக அறிவிக்க பிரதமருக்கு ராகுல் காந்தி டிவிட்டரில் கோரிக்கை விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com