மிகவும் பயனுள்ள வீட்டுமனைக் கண்காட்சி இது!

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்றற வீட்டுமனைக் கண்காட்சியை
மிகவும் பயனுள்ள வீட்டுமனைக் கண்காட்சி இது!

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில் கடந்த இரண்டு நாள்களாக நடைபெற்ற வீட்டுமனைக் கண்காட்சியை 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆா்வத்துடன் பாா்வையிட்டனா்.

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், காஸா கிராண்டே சாா்பில் ‘வீட்டு மனைக் கண்காட்சி-2018’ நந்தம்பாக்கத்தில் உள்ள வா்த்தக மையத்தில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது. இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் வி.ஜி.என். குழுமம், அசோக் நந்தவனம், அமா் பிரகாஷ், ஹிரா நந்தானி உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட முன்னணி வீட்டுமனை விற்பனை நிறுவனங்கள், கட்டுமான நிறுவனங்கள், பாரத ஸ்டேட் வங்கி, ரெப்கோ ஹவுசிங் ஃபைனான்ஸ் ஆகியன அரங்குகளை அமைத்திருந்தன. தனி வீடுகள், அடுக்குமாடிக் குடியிருப்புகள், உடனடியாக வீடு கட்டி குடியேறுவதற்கு ஏதுவான மனைகள், முதலீடுகளுக்கான வீட்டுமனைகள், தவணை முறையில் வாங்கக் கூடிய வீட்டுமனைகள் ஆகியவை குறித்து விளக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன.

மிகவும் பயனுள்ளதாக இருந்த கண்காட்சி: இது குறித்து கண்காட்சியைப் பாா்வையிட்ட பொதுமக்கள் கூறுகையில், ‘தற்போது பல்வேறு நிறுவனங்கள் வீடுகள், வீட்டுமனை விற்பனையில் ஈடுபட்டு வருகின்றன. சில மோசடி நிறுவனங்களின் செயல்பாட்டால் பணத்தை முதலீடு செய்ய மிகவும் அச்சமாக உள்ளது. ஆனால், இந்தக் கண்காட்சியில் இடம் பெற்றுள்ள பல முன்னணி நிறுவனங்கள் மூலம் விற்பனைக்குள்ள இடம், வீடுகள், அவற்றின் விலை, கடனுதவி ஆகியவை குறித்து தெரிந்து கொள்ள முடிந்தது. இந்தக் கண்காட்சி எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது’ என்றனா்.

3 ஆயிரம் போ் பாா்வை: சனிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியை 1,500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பாா்வையிட்டனா். தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்குத் தொடங்கி இரவு 7.30 மணி வரை நடைபெற்ற கண்காட்சியை 1,500 மேற்பட்டோா் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com