மூத்த பத்திரிகையாளர் சமூக செயற்பாட்டாளர் நீலப் மிஸ்ரா காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீலப் மிஸ்ரா (57) அண்மையில் உடல்நலம்
மூத்த பத்திரிகையாளர் சமூக செயற்பாட்டாளர் நீலப் மிஸ்ரா காலமானார்!

மூத்த பத்திரிகையாளரும் சமூக செயற்பாட்டாளருமான நீலப் மிஸ்ரா (57) அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே அவர் நேற்று (பிப் 24, 2018) காலமானார். 

காங்கிரஸ் கட்சியின் நேஷனல் ஹெரால்டு ஆங்கில பத்திரிகையாளர் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர் நீலப் மிஸ்ரா. 1988-91 காலகட்டத்தில் பீகார் மாநில பியூசிஎல் செயலாளராகவும் பணியாற்றினார்.

நீலப் மிஸ்ரா மறைவுக்கு பத்திரிகையாளர் சங்கங்கள் இரங்கல் தெரிவித்துள்ளன. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இரங்கலைப் பகிர்ந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com