வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
வெப்பச் சலனம் காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்ய வாய்ப்புள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம் காரணமாக, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களின் மலையோர பகுதிகளில் ஓரிரு இடங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டமாக காணப்படும். மாலை, இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தென்தமிழக கடலோர பகுதிகளிலும் கடல் சீற்றம் காணப்படும். எனவே, இந்தப் பகுதி மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.