jaya book
  • தற்போதைய செய்திகள்
  • விளையாட்டு
  • சினிமா
  • மருத்துவம்
  • லைஃப்ஸ்டைல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • ஜங்ஷன்
  • இ-பேப்பர்
  • அனைத்துப் பிரிவுகள்  
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • வர்த்தகம்
    • விளையாட்டு
    • சினிமா
    • ஜங்ஷன்
    • ஜெ.- ஒரு சகாப்தம்
    • மருத்துவம்
    • ஆன்மிகம்
    • ஜோதிடம்
    • கல்வி
    • வேலைவாய்ப்பு
    • ஆட்டோமொபைல்ஸ்
    • லைஃப்ஸ்டைல்
    • விவசாயம்
    • எம்ஜிஆர் - 100
    • -->
    • சுற்றுலா
    • தலையங்கம்
    • வார இதழ்கள்
    • சிறுகதைமணி
    • நூல் அரங்கம்
    • வீடியோக்கள்
    • புகைப்படங்கள்
    • பரிகாரத் தலங்கள்
    • பஞ்சாங்கம்
    • ஸ்பெஷல்ஸ்
    • சினிமா எக்ஸ்பிரஸ்
    • கட்டுரைகள்
    • நாள்தோறும் நம்மாழ்வார்
    • தினந்தோறும் திருப்புகழ்
    • இந்த நாளில்
    • உலகத் தமிழர்
    • ஆராய்ச்சிமணி
    • விவாதமேடை
    • கிச்சன் கார்னர்
    • கவிதைமணி
    • தொல்லியல்மணி
    • தினம் ஒரு தேவாரம்
    • இ-பேப்பர்


10:49:44 AM
சனிக்கிழமை
21 ஏப்ரல் 2018

21 ஏப்ரல் 2018

  • IPL 2018
  • கல்வி
  • வேலைவாய்ப்பு
  • வர்த்தகம்
  • விவசாயம்
  • ஆட்டோமொபைல்ஸ்
  • தலையங்கம்
  • கட்டுரைகள்
  • வார இதழ்கள்
  • அனைத்துப் பதிப்புகள்

முகப்பு லைஃப்ஸ்டைல் கலைகள்

லஷ்மண் ஸ்ருதி நடத்தும் ‘சென்னையில் திருவையாறு’ 

By உமா பார்வதி  |   Published on : 13th December 2017 11:30 AM  |   அ+அ அ-   |  

0

Share Via Email

musical

 

லஷ்மண் ஸ்ருதி இசைக்குழுவினர், ‘சென்னையில் திருவையாறு’ என்ற பெயரில், மார்கழி மாத இசை நிகழ்ச்சியை, கடந்த 12 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.

தற்போது இதன் 13-ஆம் ஆண்டு துவக்க விழா, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் வரும் டிசம்பர் 18-ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்க இருக்கிறது.

அனைவராலும் திருவையாறுக்குச் சென்று இசை விழாவில் கலந்து கொள்ள முடியாது. அக்குறையை போக்கவும், சென்னைவாசிகள் பயன்பெறும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் இவ்விழாவை வருகின்றனர் விழாவின் அமைப்பாளர்களான லஷ்மண் ஸ்ருதி. அவ்வகையில் இந்த இசை உற்சவம் டிசம்பர் 18-ம் தேதி முதல் டிசம்பர் 25 வரை எட்டு நாட்கள் சென்னையில் நடைபெறவிருக்கிறது. தவிர, தினமும் வாய்ப்பாட்டு, பரதநாட்டியம், நடனம் உள்ளிட்ட பல்வேறு இசை நிகழ்ச்சிகள் நடக்கவுள்ளன.

பிரபல இசைக் கலைஞர்கள் முதல் புதியவர்கள் வரை பங்கேற்கிறார்கள். தொடர்ந்து எட்டு நாட்கள் 60 நிகழ்ச்சிகளை தினமும் காலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை அனைவரும் ரசித்து மகிழலாம். இந்நிகழ்ச்சியை திரைப்பட இசையமைப்பாளர் தேனிசை தென்றல் தேவா தொடங்கி வைக்கிறார். முன்னணி கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசைக் கலைஞர்கள் பலர் பங்கேற்க உள்ள இந்த உற்சவத்தில், 500 பாடகர்கள் பஞ்சரத்ன கிருதியைப் பாடுவதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  

டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவுக்கு மரியாதை

தொடக்க விழாவை முன்னிட்டு பத்மவிபூஷன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணாவின் நினைவாகவும் அவருக்கு மரியாதை செய்யும் வகையாகவும், அவரது மெழுகுச் சிலை திறந்து வைக்கப்பட்டு, 8 நாட்கள் காமராஜர் அரங்க வளாகத்தில் வைக்கப்படும்.

இலவச பேருந்து

இசை நிகழ்ச்சி முடிந்ததும் ரசிகர்கள் அவரவர் வீடுகளுக்கு பத்திரமாகத் திரும்பிச் செல்ல காமராஜர் அரங்கத்திலிருந்து சோழிங்க நல்லூர், திருவான்மியூர், மேடவாக்கம், தாம்பரம், குன்றத்தூர், பூந்தமல்லி, ஆவடி, ரெட் ஹில்ஸ், திருவற்றியூர், பாரிமுனை, பெரம்பூர், மைலாப்பூர் ஆகிய இடங்கள் உள்ளிட்ட சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இரவு 7.15 முதல் இலவசமாகப் பேருந்து இயக்கப்படும்.

பம்பர் பரிசுகள்

எட்டு நாட்கள் நடைபெறும் இந்த இசை நிகழ்ச்சியில் தொடர்ந்து கலந்து கொண்டவர்களில் ஒருவர் தேர்ந்தெடுத்து, அமெரிக்காவுக்குச் சென்று வருவதற்கான இலவச விமான டிக்கெட்டுகளை கும்பகோணம் அரசு ஜுவல்லர்ஸ் வழங்க இருக்கிறார்கள். 

சீனியர் சிட்டிசன்களுக்கு மரியாதை 

இந்த ஆண்டு மூத்த குடிமக்களுக்கு மரியாதை செய்யும் வகையில், முதியோர் இல்லங்களிலிருந்து 500 முதியவர்களுக்கு காலை 7 மணி நிகழ்ச்சியை தினமும் கண்டு களிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாம சங்கீர்த்தனம், உபன்யாஸம், மற்றும் பக்திப் பாடல்களை கேட்பது ஆகியவை மறக்க முடியாத தெய்விக அனுபவமாக மலரும். இதற்காக விரிவான ஏற்பாடுகளை நிகழ்ச்சி நிர்வாகத்தினர் மேற்கொண்டுள்ளனர். இலவச போக்குவரத்து மற்றும் காலை உணவு, காபி மற்றும் தேனீர் அரங்கில் வழங்கப்படும். மேலும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஒவ்வொருக்கும் சில அத்தியாவசிய மருந்துகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி, துண்டு, நோட்டுப் புத்தகம், பேனா, முதலுதவிப் பெட்டி ஆகியவை உள்ளிட்ட ஒரு பரிசுப் பை வழங்கப்படும்.

அரங்கத்தில் இவலச மருத்துவ முகாம், இசைக்கருவிகள் விற்பனை, அறிவுத் திறன் போட்டி, உணவுத் திருவிழா ஆகியவை நடைபெறவுள்ளது.

உணவு விழா

'சென்னையில் திருவையாறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் ரசிகர்களை மகிழ்விக்க, உணவுத் திருவிழாவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இசை விழாவுடன் சேர்ந்து, அதே வளாகத்திற்குள் விதவிதமான உணவு வகைகள் கிடைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இயற்கை உணவு உள்ளிட்ட பலவேறு உணவுக் கடைகள், முன்னணி சமையல் கலைஞர்களின் கைவண்ணத்தில் ருசியான உணவு வகைகள், வெஜிடபுள் கார்விங், ஐஸ் கார்விங் உள்ளிட்ட சில சமையல் போட்டிகள் என தனித்துவமான உணவுத் திருவிழாவாக இது நடைபெற உள்ளது. நம்ம வீட்டுக் கல்யாணம் எனும் உணவு அரங்கில் ஐயப்ப பக்தர்களுக்கு 50% சிறப்பு தள்ளுபடி உண்டு.

காய்கறிகளால் வடிவமைக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி

பாரத மாதாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக 50 அடி அகலமும் 24 அடி உயரமும் கொண்ட, காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்டமான மூவர்ணக் கொடி உணவு வளாக அரங்கத்தின் நுழைவாயிலில் ஏற்றப்படும்.

ரூஃப் டாப் கார்டன்

மொட்டைமாடி தோட்டக் கலையின் முக்கியத்துவத்தை பிரபலப்படுத்தும் வகையில் இந்த ஆண்டு 10 அடி உயரம் 40 அடி அகலம் மற்றும் 40 அடி பரப்பளவில் ரூஃப் டாப் கார்டனை வடிவமைத்துள்ளார்கள். மாடி / கூரை தோட்ட வளர்ப்பை வலியுறுத்தும் விதமாக கண்ணைக் கவரும் வண்ணம் அது இருக்கும். மேலும் தோட்டக் கலை வல்லுநர்களிடம் சந்தேகங்களைப் பற்றி விவாதிக்கலாம்.  

நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மகிழ அனைவருக்கும் ஒரு நல்வாய்ப்பாக இது அமைவது உறுதி. 

இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள www.lakshmansruthi.com ஆகிய இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவும் :

தொலைபேசி எண்கள் - 044-48562170, 88070 44521 
மெயில் ஐடி - ct@lakshmansruthi.com 
இணைய தளம் : www.lakshmansruthi.com / www.chennaiyilthiruvaiyaru.com
முகநூல் - https://www.facebook.com/Chennaiyilthiruvaiyaruofficial

 

TAGS
Chennaiyil Thiruvaiyaaru சென்னையில் திருவையாறு 2017

O
P
E
N

புகைப்படங்கள்

அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதி
குந்தி
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நகை கடைகளில் அலைமோதிய கூட்டம்
பாரம்பரிய நீராவி என்ஜின்
வீரர் - வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு

வீடியோக்கள்

இனி அணு ஆயுத சோதனை இல்லை
நாடு திரும்பினார் பிரதமர் மோடி
8 மாத குழந்தை கொன்ற தாய்
8 மாத பெண் குழந்தை பாலியல் வல்லுறவு
ஸ்ரீ பிரம்மநந்தீஸ்வரர் திருக்கோயில்
நான் ஓய்வு பெறவில்லை
IPL 2018
kattana sevai
google_play app_store
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை

NEWS LETTER

FOLLOW US

Copyright - dinamani.com 2018

The New Indian Express | Kannada Prabha | Samakalika Malayalam | Malayalam Vaarika | Indulgexpress | Edex Live | Cinema Express | Event Xpress

Contact Us | About Us | Privacy Policy | Terms of Use | Advertise With Us

முகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்