தோசை மாவை உடனே புளிக்க வைப்பது எப்படி?

 அடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால்
தோசை மாவை உடனே புளிக்க வைப்பது எப்படி?

அடைக்கு ஊற வைக்கும் போது பயத்தம்பருப்பு, ஜவ்வரிசி ஊற வைத்து அரைத்தால் அடை மொறுமொறுப்புடன் சுவையாகவும் இருக்கும்.

பாகற்காய் குழம்பு வைக்கும்போது அதில் ஒரு கேரட்டையும் சேர்த்துப் போட்டால், குழம்பில் கசப்பு தெரியாது. சுவையும் கூடுதலாக இருக்கும்.

கடுகை வாங்கியவுடன் லேசாக வறுத்து, ஆறிய பிறகு டப்பாவில் போட்டு மூடி வைத்து, தேவையான பிறகு எடுத்து தாளிதம் செய்யும்போது கடுகு வெடிக்காது.

சாம்பார் பொடி அரைக்கும்போது ஒரு ஸ்பூன் கடுகு சேர்த்து அரைத்து வைத்துக் கொண்டால் பொடியில் பூச்சி, வண்டுகள் அண்டாது.

முருங்கை பிஞ்சுகளை நறுக்கி ரசத்தில் போட்டு கொதிக்க விட்டால். ரசம் மிகவும் ருசியாக இருக்கும்.

கீரையைச் சமைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தால் அதன் மனம் மாறாமல் இருக்கும்.

முட்டைகோஸ் கூட்டு வைக்கும்போது அதில் சிறிதளவு இஞ்சி சேர்த்தால் சுவை அதிகரிக்கும். வாயுத் தொல்லையும் இருக்காது.

ரவை உப்புமா செய்யும்போது ஒரு முட்டை சேர்த்து செய்தால் மெதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.

பாயசம் செய்யும்போது சேமியாவை பாலிலே வேகவைத்து செய்தால் சுவை கூடுதலாக இருக்கும்.

தோசை மாவை இரண்டே மணி நேரத்தில் புளிக்கச் செய்து தோசை வார்க்க, மாவில் மிளகாய் வற்றல் காம்புகளைப் போட்டு விட்டால் மாவு புளித்து , தோசையும் நன்றாக வரும்.

 - எம்.ஏ.நிவேதா / எல். நஞ்சன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com