அடி கனமான பாத்திரத்தில் பாலை நீர் சேர்க்காமல் ஊற்றி காய்ச்சவும்.
பாலை நன்கு கொதிக்க வைக்கவும். நடு நடுவே கரண்டியினால் ஏடு படியாதவாறு கலக்கி விட்டுக் கொண்டே இருக்கவும். பால் நன்கு கொதித்தவுடன் அதில் எலுமிச்சை சாறு (அ) தயிரை சேர்க்கவும்.
பால் திரிந்து நீர் தணியாகவும் பனீர் தனியாகவும் மாற ஆரம்பிக்கும்.
இந்த நிலையில் ஐஸ் கட்டிகளை பாலில் சேர்க்கவும். இது மேலும் பனீர் மேலும் வேகாமல் தடுக்க உதவும்.
பின் வடிகட்டியின் மேல் மஸ்லின் துணியையோ (அ) மெலிதான காட்டன் துணியையோ போட்டு வடிகட்ட வேண்டும்.
வடிகட்டிய பனீரை ஓடும் நீரில் நன்கு அலசவும். இவ்வாறு செய்வது எலுமிச்சை (அ) தயிரின் புளித்த சுவையை நீக்கும்.
பின் ஈரத்தை பிழிந்து துணியுடன் மூட்டையாகக் கட்டி 20 நிமிடங்கள் மூடி வைத்துவிடவும்.
நீர் முற்றிலும் நீங்கி பனீர் மட்டும் எஞ்சி இருக்கும்.
அதை சுமார் 10 ல் இருந்து 15 நிமிடங்கள் வரை கையினால் நன்றாக பிசைந்து வைக்கவும்.
சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
அகண்ட மூடியுள்ள பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து சர்க்கரையை போட்டு கரையும் வரை கொதிக்க வைக்கவும்.
அடுப்பை மிதமான சூட்டில் வைத்து நீரை கொதிக்க விடவும். இரண்டு ஏலக்காய்களை முழுதாக நீரில் சேர்த்துவிடவும்.
கொதிக்கும் நீரில் ஒவ்வொன்றாக பனீர் உருண்டைகளை போட்டு தட்டால் மூடிவிடவும். பனீர் உருண்டைகளை போடும் முன் ஏலக்காய்களை எடுத்துவிடவும். ஏலக்காயின் மணமும் ருசியும் நீரில் கலந்து விட்டிருக்கும்.
கடைசி வரை தீ சீரான, மிதமான சூட்டில் இருக்கும் படி பார்த்துக் கொள்ளவும்.
சுமார் 10 ல் இருந்து 15 நிமிடங்கள் வரை சீரான சூட்டில் சர்க்கரை நீர் பனீர் உருண்டைகளுடன் கொதிக்க வேண்டும்.
நடு நடுவே இரண்டு மூன்று முறை மட்டும் மிருதுவாக உருண்டைகளை கலக்கி விடவும்.
பின் அடுப்பிலிருந்து இறக்கி நன்றாக ஆறும் வரை மூடியே வைத்திருக்கவும்.
இப்போது மிருதுவான ரசகுல்லா ரெடி. பாத்திரத்தில் இருந்து கப்பில் ஒவ்வொன்றாக எடுத்து வைத்து, ஜீரா நீரையும் ஊற்றி, மேலே குங்குமப் பூ ஒன்றிரண்டாக தூவி அலங்கரிக்கவும்.
ரசகுல்லாவை ஆறிய நிலையிலோ அல்லது ஃப்ரிட்ஜில் வைத்து குளிர்ச்சியாகவோ சாப்பிடலாம்.
குறிப்புகள்
பனீரை நன்கு பிசைய வேண்டும். பிசையும் தன்மையைப் பொறுத்தே ரசகுல்லாவின் மிருதுத் தன்மை இருக்கும்.
பனீரை ஓடும் நீரில் நன்றாக அலசிய பின்பே மூட்டையாகக் கட்டி தொங்க விட வேண்டும். இல்லை என்றால் எலுமிச்சையின் புளிப்பு சுவை அதில் தங்கி ரசகுல்லாவும் புளிப்பு சுவையுடன் இருக்கும்.
வாய் அகண்ட பெரிய பாத்திரத்தை உபயோகப் படுத்தவும். கொதிக்கும் போதே பனீர் உருண்டைகள் இரட்டிப்பாக (பெரிதாக) ஆகும்.
ரசகுல்லா கொதிக்கும் போது அடிக்கடி மூடியை திறந்து பார்க்கக் கூடாது. அப்படிச் செய்யும் போது சூட்டில் சமநிலை மாறி ரசகுல்லா உருண்டைகள் ரப்பர் போல் மாறிவிடும் வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட நேரம் தவிர நீண்ட நேரமும் கொதிக்க விடக் கூடாது.
அடுப்பின் தீயை மிக சன்னமாகவோ அல்லது மிக அதிகமாகவோ வைத்து கொதிக்க விடக் கூடாது. மிதமான தீயிலேயே கடைசி வரை வைத்திருப்பது மிக முக்கியம்.
பாத்திரம் முழுவதும் உருண்டைகளை போட்டு நிரப்பாமல் அவை வேகும் அளவு தேவையான இடம் கொடுக்கவும்.
அடுப்பில் இருந்து இறக்கியவுடன் ஆறும் வரை மூடியே வைத்திருக்கவும். அடிக்கடி திறந்து பார்த்தாலோ (அ) திறந்தே வைத்து ஆறவைத்தாலோ உருண்டைகள் தட்டையாகவோ ரப்பர் போலோ ஆகிவிடும்.