கர்நாடக மாநிலத்தில் தனாபூர் என்ற கிராமத்தில் இருக்கிறார் சரணம்மா. 45 வயது. தள்ளுவண்டியில் காய்கறி விற்று பிழைக்கிறார். கிராமத்தில் உள்ள 1300 வீடுகளில் 500 வீடுகளில் கழிப்பறை கிடையாது. சரணம்மா கிராமத்தில் வீடு வீடாக போய் கழிப்பறையின் அவசியம் பற்றி பிரசாரம் செய்கிறார். அதுமட்டுமல்ல, கழிப்பறை கட்ட முன்வரும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஒரு கிலோ தக்காளி இலவசமாக கொடுக்கிறார். கழிப்பறைகள் கட்டிக் கொள்ள அரசு கொடுக்கும் பண உதவி பற்றியும் ஒவ்வொரு குடும்பத்துக்கும் எடுத்துக் கூறுகிறார்.
- அனிதா ராமச்சந்திரன்