செய்திகள்
அக்ரூட் பருப்புகளை முழுதாக உடைப்பது எப்படி?
வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்கள் பழுக்காமல் இருக்கும்
- வாழைக்காயைத் தண்ணீரில் போட்டு வைத்தால் சில நாட்கள் பழுக்காமல் இருக்கும். தண்ணீரை தினசரி மாற்றிவிட வேண்டும்.
- வாழைக்காய், வாழைத்தண்டு, கத்தரிக்காய் ஆகியவற்றை சிறிது மோர் கலந்த நீரில் நறுக்கிப் போட்டால் கறுக்காமல் இருக்கும்.
- முட்டைக்கோஸ், குடைமிளகாய், பாகற்காய், கேரட், முருங்கைக்காய், வாழைத்தண்டு போன்ற காய்கறிகளை அடிக்கடிச் சேர்த்துக்கொள்வது எடை குறைக்க உதவும்.
- அக்ரூட் பருப்புகளை முழுதாக உடைத்தெடுக்க அவற்றை ஓட்டுடன் சிறிது நேரம் வெந்நீரில் ஊற விட்டு பிறகு உடைத்து எடுக்கவும்.
- பூரிக்கு மாவு பிசையும் போது அதில் சிறிது சீரகத்தைச் சேர்க்கவும். பூரி வித்தியாசமாக சுவையில் சூப்பராக இருக்கும்.
- வெங்காயத்தை வதக்கும் போது சிறிது உப்புச் சேர்த்தால் நன்கு சிவந்து வதங்கும்.
- நூடுல்ஸ் வேக வைக்கும்போது சிறிது எலுமிச்சைச் சாறு விட்டால், நூடுல்ஸ் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் டேஸ்ட்டாக இருக்கும்.
- சமோசா செய்ய பயன்படுத்தும் மைதா மாவை மெல்லிய துணியில் மூட்டையாகக் கட்டி இட்லித் தட்டில் வைத்து ஐந்து நிமிடம் வேக விடவும். அதன் பிறகு உப்பு சேர்த்துப் பிசைந்து சமோசா செய்தால் சூப்பராக இருக்கும்.
- தட்டை ரிப்பன் பகோடா செய்யும்போது சிறிது ஓமத்தையும் பொடித்துச் சேர்க்கவும். வாசனையாகவும் இருக்கும். எளிதில் ஜீரணமாகவும் ஓமம் உதவும்.