கல்யாணம் ஆனதும் பெண்கள் கால் கட்டைவிரலுக்கு அடுத்த விரலில் மெட்டி அணிவது வழக்கத்தில் உள்ளது. அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும் என்று பெரியோர் சொல்ல காரணம் உண்டு.
அந்த விரலில் தான் கருப்பையின் நரம்பு முடிச்சுகள் வந்து முடிகின்றன. பெண்கள் மெட்டி அணிந்து நடக்கும்போது ஏற்படும் அழுத்தம் கருப்பைக்கு பெரிதும் உதவுகின்றது. இதன் காரணமாகத்தான் பெண்களுக்கு திருமணத்தின் போது மெட்டி அணிவிக்கின்றனர்.
இதை போன்றே இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும். தவிர கல்யாணமான பெண் என்பதை அடையாளம் கண்டு கொள்ளவும் உதவுகிறது.
- சி.ரகுபதி