கிண்டர் கார்ட்டன் பள்ளிகளில் குழந்தைகள் பியானோ கற்றுக் கொள்வதில் ஆர்வம் காட்டினால் அவர்களது மொழித்திறன் அதிகரிக்கிறது என எம் ஐ டி விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இசைக்கருவிகளை வாசிக்கக் கற்றுக் கொள்வதால் மொழித்திறன் மேம்படும் என்பது பல ஆண்டுகளாக நிரூபிக்கப்பட்டு வரும் உண்மை எனினும் இதன் மூலமாக மழலையரின் அறிவாற்றல் திறன், கற்றல் திறன், பொது அறிவுத் திறன் அனைத்தும் ஒருங்கே மேம்பாடு அடையுமா என்பது குறித்து மேலும் விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இன்று வரை கிடைத்த ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் பார்த்தால் பியானோ கற்றுக் கொள்வதின் மூலமாக மழலையருக்கு மொழியைக் கையாளும் லாவகம் இயல்பாகவும், எளிதாகவும் கைவருகிறது. எந்தெந்த வார்த்தைகளை எப்படி உச்சரிக்க வேண்டும். எந்த வார்த்தைகளுக்கு அழுத்தம் தரவேண்டும்? என்பதெல்லாம் பியானோ கற்றலின் மூலம் எளிதாகிறது என்பது தெளிவு. மற்றபடி மழலையரின் ஒட்டுமொத்த கற்றல் திறன் மற்றும் ஐக்யூ மேம்பாட்டில் இந்தக் கண்டுபிடிப்பால் பலனேதும் உண்டா என்றால், இப்போதைக்கு அதைப் பற்றி உறுதியாகக் கூற முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.
சிறந்த உள்ளடக்கங்களுடன் பலவிதமான செய்திகள் குழந்தைகளைச் சென்றடைய வேண்டும்: நடிகை கொங்கனா சென்!
கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
உருளை சிப்ஸ் வடிவமைப்பில் மறைக்கப்பட்டுள்ள முழுப்பூசணிக்காய்!
ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க பெண்கள் கட்டாயம் சாப்பிட்டே ஆக வேண்டிய உணவுப் பொருட்கள்!