சமைப்பது ஒரு அழகான கலை. மனம் உவந்து நம் குடும்பத்துக்கான உணவை சமைத்து பரிமாறுவது என்பது ஆத்மார்த்தமான ஒரு செயல். அதனை பெண்களின் பக்கம் ஒதுக்கிவிட்டு ஆண்கள் அதிகாரம் மட்டும் செய்யும் இடத்தில் இருப்பதால்தான் பல குடும்பங்களில் சமையல் ஒரு வேலையாகவும் சுமையாகவும் மாறிவிட்டது. மாறாக ஆண்களும் பெண்களும் இணைந்து சமைப்பதை ஒரு கலையாகவும், குடும்ப ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் செய்வார்கள் எனில் அந்தக் குடும்பம் உண்மையில் மகிழ்ச்சிகரமாக விளங்கும்.
சமையலைப் பொருத்தவரையில் சின்ன சின்ன தவறுகள் கூட ருசியைக் கெடுத்துவிடும். முழு மனதையும் கொண்டு சமைக்கப்படும் உணவே அதி ருசியாக இருக்கும். ஏனோ தானோவென்று உப்பு புளி மிளகாயை போட்டு வேக வைத்து வறுத்து பொரித்து எடுப்பதன் பெயர் சமையல் ஆகாது. எனவே ஆணோ பெண்ணோ யார் சமைத்தாலும் சரி பின்வரும் விஷயங்களில் கவனமாக இருங்கள். ருசியாக சமைத்துப் பயன் பெறுங்கள்.
இன்னும் நிறைய விஷயங்கள் உள்ளன. சமைக்கும் போது அது பற்றிய நுண்ணுணர்வு இயல்பாக வந்துவிடும். எனவே அக்கறை மட்டுமே சமைப்பதில் மிகவும் முக்கியமானது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பெரும்பாலான குடும்பங்களில் அம்மா கை சாப்பாடு ஏன் ருசியாக இருக்கிறது என்பதன் ரகசியம் இதுவே.
டிப்ஸ் - காஞ்சனா இராசகோபாலன்