கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி...இவை என்ன?

தமிழ் இலக்கியங்களில் பார்த்தால், குரங்குகள் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன.
கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி...இவை என்ன?

வலைதளத்திலிருந்து...

தமிழ் இலக்கியங்களில் பார்த்தால், குரங்குகள் பற்றி நிறைய குறிப்புகள் இருக்கின்றன. குரங்குகளுக்கு அவற்றின் வகைகளுக்கு ஏற்ப நிறைய பெயர்களைச் சூடி அழகு பார்க்கிறது' தமிழ். 

கவி, கோகிலம், நாகம், பிலவங்கம், யூகம், கோடாரம், அரி, மந்தி, வலிமுகம், கடுவன், வானரம் - இவையெல்லாம், அழகர்மலை பக்கம் செல்லும் போது, வழிமறித்து நம்மை டார்ச்சர் பண்ணக் கூடிய மங்க்கீஸ்களின் தமிழ்ப் பெயர்கள். அடுத்த முறை அவற்றைச் சந்திக்கிற சமயம்... இந்தப் பெயர்களைச் சொல்லிக் கூப்பிட்டுப் பாருங்கள். கண்களைச் சுருக்கி, தலையைச் சாய்த்து... லேசாக  அவை ஒரு பிளாஷ்பேக் போனாலும்  ஆச்சர்யப்படுவதற்கில்லை!  

இது வரைக்கும் பார்த்தது, வாழைப் பழத்துக்காகவும், இதர ஸ்நாக்ஸ் தேடியும் நம்மை அண்டும் லோக்கல் குரங்குகள். கரு மந்தி, கருங்குரங்கு என்று கேள்விப் பட்டிருக்கிறீர்களா? அதையும் தமிழ் விட்டு வைக்கவில்லை. காருகம், யூகம் - இது இரண்டும் கரு மந்திக்கான தமிழ் பெயர்கள். நீலகிரி, வால்பாறை வனப்பகுதிகளுக்குச் சென்றால், அங்கு ஒரு புது வித குரங்குகளை நாம் சந்திக்க முடியும். நிஜமாகவே மங்க்கி குல்லா போட்டது போல, முகமெல்லாம் பளபளவென இருக்க, தலைக்கு மேல் குபுகுபுவென முடி முளைத்திருக்கும். லங்கூர் குரங்குகள் என்று இதை கூப்பிடுகிறார்கள். 

இந்த லங்கூர்ஸ்களுக்கும் தமிழில் பெயர் இருக்கிறது, தெரிந்து கொள்ளுங்கள். அனுமன் குரங்குகள் என்று பேச்சு வழக்கில் அழைக்கப்படுகிற இந்த லங்கூர் குரங்குகளுக்கு கலை, மைம்முகன், கோலாங்கூலம், கள்வன், முசு, ஒரி என்று தமிழில் பெயர் இருக்கிறதாக்கும்.

http://poonaikutti.blogspot.com

முக நூலிலிருந்து....

நாம் எதைப் பிரதிபலிக்கிறோமோ அதையே 
திருப்பிக் காட்டுவது கண்ணாடி மட்டுமல்ல...
முகநூலும் தான்.

- தனுஜா ஜெயராமன்

"எனக்கு ஒரு பிரச்னை' என்று ஒரு போதும் சொல்லாதீர்கள்...
பிரச்னை என்று சொன்னாலே கவலையும் பயமும்  கட்டாயம் வரும்.
"எனக்கு ஒரு சவால்'  என்று சொல்லிப் பாருங்கள்.
தைரியமும் தன்னப்பிக்கையும் தானாகவே வரும்.  

- மாரியப்பன்

முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல், முயற்சிக்கு முக்கியத்துவம் 
அளித்தால்...
முழுமையான வெற்றி நிச்சயம்.  

- பி.ஸ்ரீனிவாசன்

நீ  இழுக்கும்  கோடுகளை வைத்துதான், என்னால் முடிவு செய்ய இயலும்...
உன் கைகளின் நீளத்தை.

- மானா பாஸ்கரன்

கட்டி வைத்தாலும்...  பறக்க வேண்டுமென்பதே கொடிகளுக்கான விதி.

- யாழினி தமிழ்வாணி

சுட்டுரையிலிருந்து...

அவளை நினைத்துக்
கவிதை எழுத 
கண்களை மூடினேன்...
அய்யோ... 
அப்படியே உறங்கிவிட்டேன்.

- கோபி

பெண்கள் ஸ்கூட்டிய வீட்டில் இருந்து வாசலுக்கு கொண்டுவரும்...
அழகு இருக்கே ...
அட... அட... அட...
குடிகாரன் தோத்துருவான்.

- கனவுலகவாசி

எப்ப பார்த்தாலும் உன்னைப் பத்தி பெருமையா பேசுற மாதிரி...பேசியே 
உசுப்பேத்தி விடுவான். 
அவனை  மட்டும்  நம்பாதீங்க!

- சின்ன நண்பன்

வண்டி ஓட்டும்போது
போன் பேச கஷ்டமாருக்குன்னு
ஹெட்செட் வாங்குனேன்.
அது அடிக்கடி டேமேஜ் ஆகுதுன்னு
ப்ளூடூத் ஹெட்செட் வாங்குனேன்.
அது மொபைல் சார்ஜ off பண்ணுதுன்னு
பவர்பேங் வாங்குனேன்.
இப்ப அத பேண்ட் பாக்கெட்ல 
வைக்க முடியலைன்னு பேக் வாங்கிருக்கேன்.
- துக்ட்விட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com