குடியரசுத் தலைவர் பதவிக்கான ரேஸ் முன்னதாகவே தொடங்கி விட்டது. எல்.கே.அத்வானி, மரளி மனோகர் ஜோஷி, சுமித்ரா மகாஜன், சுஷ்மா சுவராஜ் முதல் நமது சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் வரை பல பிரபலங்களது பெயர் பரிசீலனையில் இருப்பதாகச் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. இதில் ஒருவரது பெயர் மட்டும் வட மாநிலங்களில் மிக அதிகமாக உச்சரிக்கப்படுகிறது எனில் அவர் தான் திரெளபதி முர்மு. தற்போதைய ஜார்கண்ட் மாநில கவர்னரான இவர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
ஒடிசா பழங்குடி இனப் பெண்மணியான திரெளபதி முர்முவின் அரசியல் வாழ்க்கையைப் புரட்டிப் பார்த்தால் கடந்த 20 ஆண்டுகளாக அவரது அரசியல் சாதனைகள் அளப்பரியவை. குடியரசுத் தலைவர் பதவியில் இவர் வென்றார் எனில் இந்தியக் குடியரசுத் தலைவரான முதல் பழங்குடியினப் பெண்மணி எனும் பெருமையைப் பெற்றவர் ஆவார். முன்னதாக தற்போதும் இவருக்கு பெருமைகள் இல்லாமல் இல்லை. முதன் முதலாக ஒரு பழங்குடி இனப்பெண்மணி இந்திய மாநிலங்கள் ஒன்றின் கவர்னர் ஆதலைச் சாதித்தவரும் இவரே தான்.
குடியரசுத் தலைவர் பதவிக்கான பரிந்துரையில் இவரது பெயரும் இருக்கலாம் எனும் போது நாம் நிச்சயமாக இவரைப் பற்றித் தெரிந்து கொள்ளத் தான் வேண்டும்.
தற்போதைய இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக் காலம் ஜூலை 25 ம் தேதியுடன் முடிவடைகிறது.
அடுத்த ஜனாதிபதி யாரென்பதற்கான பதில்களில் இவரது பெயரும் இருக்கலாம். இந்திய ஜனாதிபதி ஆகிறாரோ இல்லையோ ஒருபழங்குடி இனப் பெண்ணாக இருந்து முர்மு இத்தனை சாதித்தது நிச்சயம் பெருமிதத்திற்குரிய விசயமே!