‘எழுத மறந்த கரங்களுக்குத் தமிழை எழுத வைத்தமைக்கு நன்றி’ - D. பரிமளச்செல்வி எழுதிய கடிதம்!

வேலையின் காரணமாக கணினி பழகிப் போனாலும் ஆழ்மனதில் எழுத மறந்த ஏக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஏக்கத்தைப் போக்க வாய்ப்பளித்தால்
‘எழுத மறந்த கரங்களுக்குத் தமிழை எழுத வைத்தமைக்கு நன்றி’ - D. பரிமளச்செல்வி எழுதிய கடிதம்!

இன்றைக்கு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் என எழுதுவதற்கு வாய்ப்புள்ள அனைத்து இடங்களுமே கணினி மயமாகி விட்டன. சொந்தக் கையெழுத்தில் முத்து, முத்தாக எழுதத் தெரிந்து பள்ளி, கல்லூரிக் காலங்களில் கட்டுரைப் போட்டி, கவிதைப்போட்டி, சித்திரக் கையெழுத்துப் போட்டிகளில் வென்றவர்கள் எல்லாம் கூட வாழ்க்கையின் பிற்பகுதியில் ஒரு குறிப்பிட்ட அலுவலில் பல ஆண்டுகளாக கணினி உபயோகித்துப் பழகிய பின் கையால் எழுத மறந்தவர்களாக ஆக்கப்பட்டு விடுகிறார்கள். வேலையின் காரணமாக கணினி பழகிப் போனாலும் ஆழ்மனதில் எழுத மறந்த ஏக்கம் கொஞ்சம் இருக்கத்தான் செய்கிறது. அந்த ஏக்கத்தைப் போக்க வாய்ப்பளித்தால் அவர்கள் அதை சந்தோசத்துடன் மனமுவந்து ஏற்று தங்களது திறனை வெளிக்கொணரத் தயங்குவதில்லை. அதற்கு உதாரணமாகிறார்கள் பரிமள சேல்வி போன்ற வாசகிகள். 

பரிமளச்செல்வி தினமணிக்கு எழுதிய கடிதம்...

‘நன்றி பரிமளசெல்வி’

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com