கோடை விடுமுறையைக் கழிக்க நண்பர்களுடன் பெங்களூரு அருவி ஒன்றுக்கு குளிக்கச் சென்ற இளைஞர் ஒருவர் 50 அடி உயரப் பாறையிலிருந்து வழுக்கித் தவறிக் கீழே விழுந்து உயிரிழந்த காட்சி மனதைப் பதறச் செய்கிறது. இந்தச் சம்பவம் பெங்களூரு ராம்நகர் மாவட்டத்தில் உள்ள ஹக்கில்புரா என்ற இடத்தில் நிகழ்ந்துள்ளது. உயிரிழந்த இளைஞரின் பெயர் சீனிவாச ரெட்டி எனத் தெரிய வந்துள்ளது. நண்பர்களுடன் விடுமுறையக் கொண்டாட அருவிக்கு வந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கோடை விடுமுறை என்றாலே மக்கள் குடும்பம், குடும்பமாக கடற்கரை, அருவிக் குளியல், பீச் ரிஸார்ட்டுகள், மலைவாசஸ்தலங்கள் என்று கிளம்புவது வழக்கமான செயல். ஆனால் மகிழ்ச்சியாகக் கழிக்க வேண்டிய அந்த விடுமுறைக் கொண்டாட்டங்கள் இப்படி துயரமானதாக முடிந்தால் அது வாழ்நாள் முழுமைக்குமாக ஜீரணிக்க முடியாத இழப்பாக மாறிவிடக்கூடும். எனவே பொதுமக்கள் விடுமுறையைக் கழிக்க அருவிக் குளியல் செய்வதெல்லாம் சரி என்றாலும் கூடுமானவரை போதுமான எச்சரிக்கை நடவடிக்கைகளுடனே தங்களது பயணத் திட்டங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இல்லையேல் இப்படியான திடுக்கிடும் விபத்துக்களில் சிக்கி உயிரிழக்க வேண்டியதாகி விடும்.
அருவி, நீச்சல்குளம் மற்றும் கடலில் குளிக்கும் போது பின்பற்றப்பட வேண்டிய எச்சரிக்கை நடவடிக்கைகள்...
விடுமுறைகளில் அருவி, மலை, கடற்புறங்கள் என சுற்றுலா செல்வது எதற்காக? ஆனந்தமாக இயற்கையழகையும், சுத்தமான காற்றையும் சுதந்திர உணர்வையும் அனுபவிக்கத் தானே தவிர த்ரில் விளையாட்டுகளில் ஈடுபட்டு உயிரை இழக்க அல்ல. எனவே மேற்சொல்லப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை கவனமாகப் பின்பற்றி இன்பச் சுற்றுலா மனநிலைக்கு குந்தகம் வராமல் பார்த்துக் கொள்வீர்களாகுக!
அதென்னது அது ‘சாதனா கட்’? நீங்க ட்ரை பண்ணி இருக்கீங்களா கேர்ள்ஸ்?!
என் தாயைக் கொன்றவர்களுக்கு உச்சபட்ச தண்டனை அளியுங்கள்! ருக்மிணியம்மாளின் மகன் உருக்கமான வேண்டுகோள்!
வெளிநாடுகளில் எகிறிக் கொண்டிருக்கும் தமிழக முருங்கைக் கீரையின் மவுசு!
ஒரே வாரத்தில் 3 முதல் 5 கிலோ வரை எடை குறைக்க ஒரு சூப்பர் டயட்!
கார்பைடு ரசாயன ஆபத்தில்லாத சரியான மாம்பழங்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?