இப்போதெல்லாம் தினமும் காலையில் விழிப்பது அவரவர் ஃபோனில் உள்ள வாட்ஸ் அப்பில் தான். அதில் அன்பிற்கு உரியோரின் காலை வணக்கத்தைப் பார்த்த பின்பு தான் படுக்கையை விட்டு எழுந்து கொள்வோம். அதன் பின் குளியலறை நேரத்தைத் தவிர மற்ற எல்லா சமயத்திலும் நம் கரங்களில் சதா சர்வ காலமும் துடித்துக் கொண்டிருப்பது செல்ஃபோனில் உள்ள வாட்ஸ் அப் செய்திகள் தான். நம் நட்பு வட்டத்தையும் உறவுப் பாலத்தையும் தக்க வைத்திருக்க உதவி புரிவது வாட்ஸ் அப் என்றால் மிகையில்லை. சமயத்தில்
வாட்ஸ் அப்பில் (Whatsapp) சமீபத்தில் புதிய அப்டேட்டாக 'பின்சாட்’ (PIN CHAT) எனும் வசதி இணைக்கப்பட்டுள்ளது.
பின் சாட் என்றால் என்ன? நமக்கு பிடித்தமான 3 தனி நபர்களையோ அல்லது மூன்று குழுக்களையோ, சாட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் வைத்துக் கொள்ளலாம். இதன் மூலம் 3 நபர்களையோ அல்லது குழுக்களையோ மட்டும் பின் செய்து கொள்ள முடியும் என்கிறது இந்த வசதியை அறிமுகப்படுத்திய வாட்ஸ் அப் நிறுவனம்.