ஸ்ரீ தேவி கருமாரி அம்மன் திருக்கோயிலில் 04.08.17 முதல் 108 நாள் யாகப்பெருவிழா நடைபெற்று வருகிறது. இவ்விழாவிற்கு மிகவும் சிறப்பு சேர்க்கும் வகையில் வரும் 14-08-2017 திங்கள் கிழமை கோகுலாஷ்டமியை முன்னிட்டு சந்தான கோபால கிருஷ்ணர் யாகம் நடைபெறுகிறது.
புத்திர பாக்கியத்திற்காக நடைபெறுவதே இந்த யாகத்தின் சிறப்பம்சமாகும். புத்திர பாக்கியம் இல்லாதோர் இந்த யாகத்தில் கலந்துகொள்ள அன்போடு அழைக்கப்படுகிறது.
மேலும் அம்மனுக்கு 1008 புடவைகளால் வஸ்திர அலங்காரம் செய்யப்பட உள்ளது. அம்மனுக்கு புடவை காணிக்கை செய்ய விரும்பும் பக்தர்கள் புடவை காணிக்கை செய்து அம்மன் அருள் கிடைக்கப் பெறுங்கள்.