திருவாரூர், மடப்புரம், ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி சுவாமிகள் 182 ஆவது ஆண்டு குருபூஜை விழா அவருடைய ஜீவ சமாதி வளாகத்தில் (கமலாலயம் அருகில்) ஆகஸ்ட் 24, வியாழனன்று (உத்திரம்) நடைபெறுகின்றது. அன்று காலை 5.00 மணிக்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின்றன. சிறப்பு ஹோமங்கள், பூஜைகள், அன்னதானம் அளித்தலும் நடைபெறும். மாலை இன்னிசை நிகழ்ச்சியும், இரவு முத்துப்பல்லக்கில் சுவாமிகளுடைய அலங்கரிக்கப்பட்ட விக்ரக வீதியுலாவும் நடைபெறுகின்றது. ஏற்பாடுகளை தற்போதைய மடாதிபதி ஸ்ரீ. கிருஷ்ணானந்த சுவாமிகள் வழிகாட்டுதலின்படி மடத்து நிர்வாகிகள் செய்துள்ளனர்.
தொடர்புக்கு : 94434 36393.
- ஜி. தட்சிணாமூர்த்தி