காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்தில் உள்ள சித்திரவாடி கிராமத்தில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் சந்நிதியில் உடையவர் ஸ்ரீராமானுஜரின் பஞ்சலோக விக்ரகப் பிரதிஷ்டை வைபவம் டிசம்பர் 24-ம் தேதி காலை 7.30 - 9.00 மணிக்குள் நடைபெறுகின்றது.
இவ்வாலயத்திற்கு அருகில் மலை அடிவாரத்திலும் மலை உச்சியிலும் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் சந்நிதி அமைந்துள்ளது விசேஷமானது. அதனால் இப்பகுதி சிம்மகிரிமலையென்றும், நயா திருப்பதியென்றும் சிறப்பித்து அழைக்கப்படுகின்றது. (சித்ரவாடி, மதுராந்தகத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் உள்ளது)
தொடர்புக்கு : 94432 40074 / 044 - 2754 0073 /74.
- எஸ்.வெங்கட்ராமன்