நம் வீட்டில் திடீரென ஏற்படும் பிரச்னைகள், உடல் நலக்குறைவு, விரயச் செலவு, குடும்பச் செலவு மனக் குழப்பம் போன்ற நிகழ்வுகள் நிகழ்கின்றதா? அப்படி நேர்ந்தால் சுதாரித்துக்கொண்டு உங்களது செல்வத்தை தக்க வைத்துக்கொள்ள, இந்த அறிகுறிகளை அறிந்துக் கொள்வது மிகவும் அவசியமாகும்.
• வீட்டில் பெண்கள் விளக்கேற்றாமல் ஆண்கள் விளக்கேற்றுதல்.
• தலைமுடி கற்றைகள் தரையில் விழுந்து சுழன்று கொண்டேயிருந்தல்.
• சுவர், ஜன்னல், வாசல்கள் மேல் தூசி ஒட்டடைகள் சேர்ந்து இருந்தால்.
• சூரியன் மறைந்த பின் வீட்டைப் பெருக்குதல், துடைத்தல்.
• பெண்கள் தினமும் தலைக்குக் குளிப்பவர்களைத் தவிர மற்றவர்கள் செவ்வாய், வெள்ளி தவிர மற்ற நாளில் தலைக்குக் குளித்தல்.
• வீட்டுக்குழாய்களில் தண்ணீர் சொட்டுதல்.
• வீட்டில் கரையான் புற்று இருத்தல்.
• அதிக நேரம் ஈரத் துணிகளை போட்டு வைத்தல்.
• பூராண், தேள் போன்ற விஷ ஜந்துக்கள் வீட்டில் உலாவுதல்.
• உணவுப் பொருட்களை வீணடித்தல்.
• உப்பு, பால், சர்க்கரை, அரிசி போன்றவற்றை அடியோடு தீரும் வரை வாங்காமல் இருத்தல் மற்றும் அதன் பாத்திரங்களை கழுவி வைத்தல்.
• குறைந்த பட்ச வெளிச்சம் கூட இல்லாமல் வீட்டை இருட்டாக வைத்தல்.
• சமையல் அறையில் கழுவப்படாத எச்சில் சமையல் பாத்திரங்கள் அதிக நேரம் அப்படியே கிடந்திருத்தல்.
• வீட்டில் எப்போதும் இனிமையான இசையைக் கேட்காமல் கொடூர இசையைக் கேட்டல்
• இல்லை, இல்லை, வரவே வராது வேண்டாம் வேண்டாம், அய்யோ, அடப்பாவி போன்ற வார்த்தைகளை அதிகம் உச்சரித்தல்.
• வாசலில் செருப்பு, துடைப்பம் போன்றவற்றை படுக்கைவாட்டில் அலங்கோலமாக வைத்திருத்தல்.
இந்த மாறியான ஒழுங்கீனமற்ற செயல்களை வீட்டில் அறவே தவிர்க்க வேண்டும். நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் லட்சுமி கடாட்சம் உள்ளது என்பதை நினைவில் கொண்ட செயல்பட வேண்டியது அவசியம்.