தருமபுர ஆதின இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தர் அவர்கள் பட்டமேற்றவுடன் முதன் முறையாக சென்னைக்கு விஜயம் செய்து அருளாசி வழங்குகின்றார். ஜூன் 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தியாகராயநகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள தருமபுர ஆதின சமயப் பிரசார நிலைய வளாகத்தில் மாலை 6.15 மணிக்கு வரவேற்பு மற்றும் போற்றி மடல் வாசித்தளித்தலும் தொடர்ந்து இளைய சந்நிதானம் அவர்களின் ஆசியுரையும் நடைபெறுகின்றது. மெய்யன்பர்கள் பெருமளவில் கலந்துகொள்ளுமாறு சமயப் பிரசார நிலையத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
தொடர்புக்கு - 28142642
- எஸ்.வெங்கட்ராமன்