முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலுக்குச் செல்லும் ரோப்கார் வசதி இன்று மட்டும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மலைக்கோயிலுக்குப் பக்தர்கள் எளிதாகச் செல்ல ரோப்கார் இயக்கப்படுகிறது. இந்நிலையில், இன்று அந்த மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.
இன்று நடைபெறும் பராமரிப்பு பணியில் ரோப்கார் பேரிங்குகள், ரப்பர் புஷ்கள், டவர் சக்கரங்கள் என அனைத்தும் சீரமைக்கப்படும். ஆகவே, பக்தர்கள் விஞ்ச் மற்றும் படிவழிப் பாதையை பயன்படுத்துமாறு கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.