மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆனி ஊஞ்சல் உற்சவம் ஜூன் 29 முதல் ஜூலை 8-ம் தேதி வரை நடைபெறுகிறது.
உற்சவம் நடைபெறும் நாட்களில் சாயரட்சை பூஜைக்குப் பின் மீனாட்சி சுந்தரேஸ்வரர் பஞ்ச மூர்த்திகளுடன் சேர்த்தியில் இருந்து புறப்பாடாகி, சுவாமி சன்னதியில் அமைந்துள்ள 100 கால் மண்டபத்தில் உள்ள ஊஞ்சல் மண்டபத்திற்கு ஏழுந்தருள்வார்.
இதையடுத்து, ஊஞ்சல் உற்சவத்தின் கடைசி நாளான ஜூலை 8-ம் தேதி உச்சிகால வேளையில் மூலஸ்தான சொக்கநாதப் பெருமானுக்கு முப்பழ அபிஷேகம் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.