கைரேகைப் படி சூரியன் கொடுக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு?

நம் உள்ளங்கையில் நிறைய ரேகைகள் உண்டு. அந்த ரேகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை கொடுக்கக்கூடியது. அந்த வகையில்,
கைரேகைப் படி சூரியன் கொடுக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு?

நம் உள்ளங்கையில் நிறைய ரேகைகள் உண்டு. அந்த ரேகைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பலனை கொடுக்கக்கூடியது. உதரானமாக, தனரேகை அழுத்தமாக இருந்தால் செல்வ செழிப்பையும், ஆயுள் ரேகை நீண்ட ஆயுளையும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை பலனளிக்கும்.

அதாவது, ரேகைகள் ஆரம்பிக்கும் போது மிகவும் மெல்லியதாகவும் வளர வளர இது அழுத்தமாகவும், தெளிவாகவும் தெரியும்.சில ரேகைகள் கொஞ்சம் கொஞ்சமாக மறையவும் செய்யும். இப்படி ரேகைகள் வளரும் போதும், அழுத்தமாகத் தெரியும் போதும் அதிகப் பலன் நீண்ட காலம் இருக்கும்.

அதிர்ஷ்டம் என்பது திருஷ்டிக்கு அப்பாற்பட்டது. ஒருவருக்கு எந்தத் துறையில் அதிர்ஷ்டம் ஏற்படும் என்பதைச் சொல்வதற்கு பலவிதமான கிரக அமைப்புகள் ஜாதகத்தில் உண்டு. கைரேகைப் படி சூரியன் கொடுக்கும் அதிர்ஷ்டம் யாருக்கு என்பதைப் பார்க்கலாம்.

சூரிய ரேகையா அப்படினா என்ன? அது எங்கே இருக்கு..... கட்டாயம் தெரிஞ்சிகோங்க...உங்கள் உள்ளங்கையில் விதி ரேகையில் இருந்து சூரிய மேட்டை நோக்கிச் செல்வதே சூரிய ரேகை.

• மோதிர விரலின் அடிப்பாகம் தான் சூரியமேடு. உழைப்பினால் ஒருவருக்கு ஏற்படும் முன்னேற்றம், புகழ் கிடைப்பது, அரசியலில் சாதிப்பது என அனைத்திற்கும் காரணமாக திகழ்வது சூரிய மேடு.

• ஒருவர் கையில் இது உப்பலாகவும், கம்பீரமாகவும் அமைந்திருந்தால் அவருக்குச் சூரியனது பலம் பூரணமாக உள்ளது என்று அர்த்தம்.  

• சூரிய விரல் மேட்டில் ஒரு செங்குத்து ரேகை இருந்தால், அவருக்குப் புகழ், கீர்த்தி, செல்வம் செல்வாக்கு எல்லாம் அமைந்திருக்கும்.

• ஒரு செங்குத்து ரேகையும், அதன் மேல் ஒரு நட்சத்திரக் குறியும் அமைந்திருந்தால் அந்த நபர் சிறந்த புத்திமானாகத் திகழ்வார். இவருக்குப் புகழும், திடீர் அதிர்ஷ்டமும் உண்டாகும் என்பது நிச்சயம்.

• சூரிய மேட்டில் சதுரக்குறி அல்லது பெருக்கல் குறி இருந்தால் செல்வந்தனாக இருந்தும், எளிமையாக வாழ்வார்.
 
• சூரிய மேடு வலுவிழந்த நிலையில் மெல்லியதாக இருந்தால் அரசு வேலையோ, அரசு சார்ந்த வேலையோ தோல்வியை தரும். இவர்கள், சுய தொழிலை செய்பவர்களாகவே இருப்பார்கள். ஆனால் அதற்கு மாறாக சூரிய மேடு அழுத்தமாகவும், தெளிவாகவும் இருந்தால் அரசியலில் நிச்சயம் ஜெயிப்பார்.

• ரேகையில்லாமல் ஒரு நட்சத்திரக் குறி மட்டும் இருந்தால், பல காலம் கஷ்டத்திற்குப் பின் அவருக்கு திடீர் அதிஷ்டம் உண்டாகும்.

• வட்ட வளையம் இருந்தால், பல காலம் கழித்து பெரும் கீர்த்தி உண்டாகும்.

• சூரிய மேட்டில் முக்கோணம் இருந்தால் சாஸ்திர ஆராய்ச்சியில் ஈடுபடுவார்.

• சூலக் குறி தென்பட்டால் திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com