திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வருண ஜப பூஜை

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது.
திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் வருண ஜப பூஜை

பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோயிலில் மழை வேண்டி வருண ஜப பூஜைகள் இன்று நடைபெற்றது. இதில் தொழில்துறை அமைச்சர் எம்.சி சம்பத் மற்றும் அதிமுக நிர்வாகிகள்,  பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

காலை 6 மணிக்கு நித்தயபடி பூஜையும், 7 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனையும், 7.30-க்கு யாக சாலை பூஜையும் நடத்தப்பட்டது. பின்னர் வருண மூல மந்திரம் 1008 முறை கூறி 7 பட்டாச்சாரியார்கள் வருண ஜெபம் நடத்தினர்.

மூலிகை திரவியங்களை கொண்டு யாக சாலை பூஜை நடத்தப்பட்டது. 9 கலசங்கள் வைத்து வருண பகவானின் வேத மந்திரம் கூறி வேண்டினர். நாதஸ்வரம் மூலம் அமிர்த்தவர்ஷினி யாகம் வளர்த்து (ஆண்டாள் பாடி அருளிய ஆழி மலை கண்ணா) பாசுரத்தைப் பாடி கூட்டு பிராத்தனை நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com