காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீ பர்வதவர்தனீ அம்பிகை உடனுறை ஸ்ரீ கைலாசநாதஸ்வாமி ஆலய புனராவர்தன அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் ஜூன் 05-ம் தேதி நடைபெறுகிறது.
இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியால் பராமரிக்கப்பட்டும், இந்துசமய அறநிலையத்துறையின் நிர்வாகத்தில் இயங்கி வரும் இத்திருக்கோயிலில் இறைவனது திருவருளால் நிகழும் ஸ்வஸ்தி மங்களகரமான ஹேவிளம்பி வருடம் வைகாசி 22-ம் தேதி (05.06.2017) திங்கட்கிழமை ஏகாதசி சித்திரை நக்ஷத்ரம் சித்த யோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் முற்பகல் 12 மணிக்கு மேல் 12.30 மணிக்குள்ளாக சிம்ம லக்னத்தில் ஸ்ரீ கைலாசநாதர் மற்றும் ஸ்ரீநாரதேச்வரருக்கு கும்பாபிஷேகம் செய்வதாய் திருவருளும் குருவருளும் கூடியுள்ளது.
இந்த மஹாகும்பாபிஷேகத்தில் பொதுமக்கள் கலந்துகொண்டு இறைவனின் திருவருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.