பௌர்ணமியில் மிகவும் விசேஷமானது ஐப்பசி மாதத்தில் வரும் பௌர்ணமி தான். இந்த நன்னாளில் ஸ்ரீ அருணாசலேஸ்வரருக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்படுவது மிகவும் சிறப்பானதாகும்.
ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரத்தை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவண்ணாமலையில் கிரிவலம் வருவது பிரசித்தி பெற்றதாகும். இங்குள்ள 14 கி.மீ. தொலைவு கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை தரிசித்தால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
எனவே, ஒவ்வொரு மாதமும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர்.
இந்த நிலையில், ஐப்பசி மாத பௌர்ணமியையொட்டி, வெள்ளிக்கிழமை மதியம் 12.17 மணி முதல் அடுத்தநாள் சனிக்கிழமை காலை 04.02 மணி வரை கிரிவலம் வரலாம் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.