வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருக... இதைச் செய்யலாம்!

நாம் குடியிருக்கும் வீட்டில், லக்ஷ்மி வாசம் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரும் விரும்புவர்.
வீட்டில் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருக... இதைச் செய்யலாம்!

நாம் குடியிருக்கும் வீட்டில், லக்ஷ்மி வாசம் செய்ய வேண்டும் என்பது ஒவ்வொருவரும் விரும்புவர். லக்ஷ்மி தேவி நிரந்தரமாக வீட்டில் வாசம் செய்ய என்ன செய்யலாம்? 

இந்த மஹாலக்ஷமி ஸ்லோகத்தை தினமும் சொல்லி வரலாம். 

'ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்

ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்

ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம் சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்

ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்''

பொருள்:
ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பானவளும், தனது ஒளியால் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவர்பபவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் பிரகாசமே உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ
சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம் 42-வது அத்தியாயத்தில் உள்ள மகாலட்சுமியின் இந்த தியான ஸ்தோத்திரத்தைச் சொல்லி வீட்டில் வழிபட்டால் அஷ்ட ஐஸ்வரியங்களும் பெருகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com