ஆன்மிகம்
திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் இன்று துவக்கம்
ஆந்திர மாநிலம், திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
ஆந்திர மாநிலம், திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.
திருப்பதி ஏழுமலையானுக்கு நடைபெறுவது போல் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் தேவஸ்தானம் திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு வருடாந்திர பிரம்மோற்சவத்தை நடத்தி வருகிறது. அதன்படி, வரும் நவம்பர் 15-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை திருச்சானூரில் பிரம்மோற்சவம் நடைபெற உள்ளது.
அதன்படி, இன்று காலை பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. நேற்று, கோயிலில் லட்ச குங்குமார்ச்சனையும், நவதானியங்களை முளைவிடும் அங்குரார்ப்பணமும் நடந்தது. பிரம்மோற்சவ அட்டவணையின்படி இன்று தாயார் சின்னசேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருபாலிக்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் திருமலை தேவஸ்தான முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.