நீங்கள் விரும்பும் அனைத்திற்குமான சக்தி உங்களுக்குள்ளே!

ஆன்மிகத்தில் நிறைய மறைபொருள்கள் உள்ளன. நிச்சயம் அவை இக்காலத்தில் எல்லோருக்கும் புரியாது.
நீங்கள் விரும்பும் அனைத்திற்குமான சக்தி உங்களுக்குள்ளே!

ஆன்மிகத்தில் நிறைய மறைபொருள்கள் உள்ளன. நிச்சயம் அவை இக்காலத்தில் எல்லோருக்கும் புரியாது. நமது முன்னோர்கள் வாழ்ந்த அந்த வாழ்க்கையை பற்றி மட்டுமே எண்ணியதால்தான் வான சாஸ்திரம் ஜோதிடம் சித்த மருத்துவம் போன்ற கலைகளை கற்க முடிந்தது. மாறாக நம்மை போல் அவர்களும் முன்னே நடந்த புராணங்களை மட்டுமே ஆராய்ந்து கொண்டு இருந்தால் எதையும் சாதித்து இருக்க முடியாது. 

தமிழன் அதிகம் முன்னேர முடியாததற்கு இதுவே காரணம். தெற்கு தெருவில் திருடனை பார்த்து நாய் குரைக்கும். இதை கேட்ட வடக்கு தெரு நாய் தானும் திருடனை பார்த்தது போல் பெரிதாய் காட்டிக்கொண்டு குரைக்கும். இதனை அடுத்து ஊர் முழுவதும் நாய் குரைக்கும் சத்தம் கேட்கும். இக்காலத்தில் அற்ப அளவு மனிதர்களே கடவுளை உணர்ந்தாலும் மற்றவர்கள் ஊரை ஏமாற்றி பிழைப்பு நடத்துகிறார்கள். 

புராணங்கள் உண்மையாக இருந்தாலும் அதை எல்லாம் புரந்தள்ளிவிட்டு தன் அறிவை மட்டும் பயன்படுத்தி தன்னை அறிய முற்படுங்கள் உலகின் முதல் சித்தனோ விஞ்ஞானியோ எவனையும் பின்பற்றவில்லை. யார் எது சொன்னாலும் நம்பாதீர்கள். அதற்கான விடை உங்களுள்தான் இருக்கிறது. தேட முயலுங்கள் நிச்சயம் கிடைக்கும். இந்த பிரபஞ்சத்தை படைத்த அந்த மாபெரும் சக்தி நீங்கள்தான். அதை உணர்ந்து வாழ்க்கையில் எல்லா விதத்திலும் மேன்மை அடைய வேண்டும். 

ஓர் ஒப்புயர்வற்ற சக்தி, ஒரு செங்கோலோச்சம் ஆற்றல் எல்லையற்ற பிரபஞ்சத்தில் பரவி ஆட்சி செலுத்தி வருகிறது. நீங்கள் இந்த சக்தியின் ஓர் அங்கம் நீங்கள் எதுவாக இருக்க வேண்டும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் எவற்றையெல்லாம் பெற வேண்டும் என்று விரும்பி கனவுகள் காண்கிறீர்களோ அந்த கனவு வாழ்க்கை நீங்கள் நினைத்திருந்ததை விடவும் வெகு அருகிலேயே எப்போதும் இருந்து வந்துள்ளது ஏனெனில் நீங்கள் விரும்பும் அனைத்திற்குமான சக்தி உங்களுக்குள்ளே தான் இருக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com