ஆன்மிகத்தில் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியவை? 

இல்லறத்தைக் கைவிடாமல், மனதையும் பக்குவப்படுத்தி, ஆன்மிக வழியில் செலுத்தி செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வீட்டை...
ஆன்மிகத்தில் பெண்கள் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டியவை? 

இல்லறத்தைக் கைவிடாமல், மனதையும் பக்குவப்படுத்தி, ஆன்மிக வழியில் செலுத்தி செய்ய வேண்டியவற்றை முறையாகச் செய்து வீட்டைக் கோயிலாக மாற்றிவர்கள் பெண்களே.

அப்படிப்பட்ட பெண்கள் ஆன்மிகத்தில் நிச்சயம் தெரிந்துகொள்ள வேண்டிய சில விஷயங்கள் உண்டு. அது என்னவென்று பார்ப்போம். 

•  கோலமிடும் போது தெற்கே பார்த்து நின்றுகொண்டு கோலமிடக் கூடாது.

• திருமணம் ஆன பெண்கள் ஒரே ஒரு விரலில் மட்டுமே மெட்டி அணிய வேண்டும். ஒரே காலில் இரண்டு மூன்று அணியக்கூடாது. அணிவதால் ஆரோக்கியம் மற்றும் கணவனின் வளர்ச்சி (உடல், 

வருமானம்) பாதிப்பு அடையும்.

• கர்ப்பமான பெண்கள் உக்கிர தேவதைகள் இருக்கும் கோயிலுக்கு செல்லக்கூடாது.

• பெண்கள் கிழக்கு திசையை நோக்கி குங்குமத்தை இரண்டு புருவ மத்தியிலும் உச்சந்தலையிலும் இட்டுக்கொள்ளவேண்டும். திருமணம் ஆகாதவர்கள், உச்சந்தலையில் இட்டுக்கொள்ளக்கூடாது.

• அமாவாசை நாட்களில் வாசலில் கோலம் போடக்கூடாது.

•  மஞ்சள் நூல் கயிற்றில் மட்டுமே திருமாங்கல்யத்தை கோர்த்து அணிந்து கொள்ள வேண்டும்.

• பெண்கள் கோயிலில் அங்கப்ரதக்ஷிணம் செய்யக் கூடாது (பெண்களின் மார்பு பகுதி பூமியில் படக்கூடாது).

•  கோயில்களில் பிரசாதமாக தரப்படும் துளசியை தலையில் வைத்துக் கொள்ளக்கூடாது.

•  பெண்கள் எப்போதும் முந்தானையைத் தொங்க விட்டு நடக்கக்கூடாது.

•  கோயிலில் தெய்வத்தை வணங்கும் போது பின்னங்கால்கள் இரண்டையும் சேர்த்துக்கொண்டு முன் நெற்றி தரையில் படுமாறு மண்டியிட்டு வணங்கவேண்டும்.

• தலை குளிக்கும் பொழுது சுமங்கலி பெண்கள் சிறிது மஞ்சளை உரைத்து முகத்தில் பூசிக்கொண்டு பிறகு குளிக்க வேண்டும்.

•  வெள்ளிக்கிழமைகளில், விஷேச நாட்களில் (பண்டிகை நாட்களில்) பாகற்காயைச் சமைக்க கூடாது. அவ்வாறு செய்வதால் பாவம் வந்து சேரும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com