நவக்கிரகங்களில் மிகவும் முக்கியமான கிரகமாக திகழ்பவர் சனி பகவான். பொதுவாக சனீஸ்வரன் யாரையெல்லாம் பாதிப்பதில்லை என்று பார்ப்போம்.
• நமசிவாய எனும் நாமம் உச்சரிப்பவர்களை சனி பாதிப்பதில்லையாம்.
• பாவவினைகளுக்கு பரிகார மருந்து பிரதோஷ வழிபாடு. அதைத் தடையின்றி செய்பவர்களை சனி தண்டிப்பதில்லையாம்.
• காகத்திற்கு அன்னம் அளிப்பவர்கள், பித்ரு கடன் சரிவர செய்பவர்களை சனி பகவானின் கருணை பார்வை நம் மீது படுமாம்.
• கருப்பு காராம்பசுவின் பால், நெய், தயிர் இவற்றுடன் பூஜிப்பவர்களை சனி பகவானுக்கு மிகவும் பிடிக்குமாம். அவர்களை சோதிப்பாரே தவிரப் பாதிப்பதில்லையாம்.
• அனுதினம் சிவபூஜை செய்யும் ஆச்சாரியார்கள், சீலர்களை சனி பகவான் நேசிப்பாராம்.
• சுத்தமும் சுகாதாரமும் நிறைந்தவர்கள், மற்றவரை அல்லல்படுத்தி ஆனந்தப்படாதவர்களை பீடிக்கும் காலத்திலும் பாவமன்னிப்பு அளித்து நம்மைப் பாதுகாப்பாராம்.
• சத்தியம் தவறாதவர்கள் மனதில் நித்திய வாசம் செய்வாள் மஹாலக்ஷ்மி என்பார்கள். அந்த திருமகள் இருக்கும் இடத்தைத் திரும்பிக்கூட பார்ப்பதில்லையாம் சனி பகவான். அதாவது சத்தியம் தவறாதவரை.
• சனிக்கிழமை விரதமிருப்பதும், சுதர்சன எந்திர வழிபாடு செய்வதும் சனிக்கு பிடித்தமான ஒன்று.
• எள் கலந்த அன்னம் வைத்து எந்நாளும் துதிப்பவரை சனி நெருங்குவதே இல்லை.
•. வலம்புரி சங்கு உள்ள இல்லம், சாலகிராமத்தை பூஜிப்பவர்களை சனி படுத்துவதில்லையாம்.
• ருத்ராட்சம் அணிந்தவர்களை ருத்திர பிரியரான சனி பீடிப்பதில்லையாம்.