ஏவல், பில்லி, சூனியம் தொல்லைகள் தமக்கு இருப்பதாக தோன்றினாலோ, அல்லது எவரேனும் கூறியிருப்பின் என்ன பரிகாரம் செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.
ஒன்பது வாரம் செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் ராகு வேளையில், சூலினியின் படத்தை ஒரு மரப்பலகையில் வைத்து, மா கோலமிட்டு, வேப்பிலைகளை தூவி அதன் முன் மண் அகலில் நல்லெண்ணெய் தீபமேற்றி இந்த மந்திரத்தை கிழக்கு முகமாக அமர்ந்து சொல்ல வேண்டும். சொல்லி முடித்த பின்பு நிவேதனம் செய்து வழிபட்டு வரலாம். இவ்வாறு செய்வதன் மூலம் செய்வினை தொல்லைகள் அகலும்.
இதே பரிகாரத்தை சரபேஸ்வரர் சன்னதியிலும் செய்து வரலாம். சூலினியானவள் எதிரிகள் தொல்லை, கிரக கோளாறுகள் போன்ற அனைத்தையும் நீக்குபவள்.
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினி
துஷ்ட க்ரஹ ஹூம் பட் ஸ்வாஹா
இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 என பாதிப்பின் கடுமையை பொறுத்து செய்யவும்.