2017-க்கான குருப் பெயர்ச்சி பலன்களை ஜோதிடரத்னா சோ. சந்திரசேகரன் அவர்கள் துல்லியமாக நமக்கு கணித்து அளித்துள்ளார்.
நவகிரகங்களின் மிகவும் நற்பலன்களைக் கொடுப்பவர் குரு பகவான். இவர் வருடத்துக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடந்து அடுத்த ராசிக்குச் செல்கின்றார். தற்போது, வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 2017, செப்டம்பர் 2-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்குச் செல்கின்றார். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி, செப்டம்பர் 12-ம் தேதி அன்று கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு குரு செல்கின்றார்.
பொதுவாக, குரு பார்த்தால் கோடி நன்மை உண்டாகும் என்பது நமது நம்பிக்கை. ஒருவருக்கு லக்கினத்துக்கோ, அல்லது லக்கினாதிபதிக்கோ, அல்லது சந்திரனுக்கோ குருபார்வை இருந்தால் அவர்களுக்கு தெய்வ அனுகூலம் கிடைக்கும். அவர்கள் செய்யும் பிரார்த்தனைகளுக்கோ அல்லது பரிகாரங்களுக்கோ பலன் கிடைக்கும்.
12 ராசிகளுக்கான குருப்பெயர்ச்சி பலன்களை படிக்க - https://goo.gl/zDbWf4