இன்று பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இன்று பௌர்ணமி: திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்

திருவண்ணாமலை ஆவணி மாத பௌர்ணமியையொட்டி, கிரிவலம் வர உகந்த நேரம் எது என்பதை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் கிரிவலம் பிரசித்தி பெற்றது. இங்குள்ள 14 கி.மீ. தொலைவுள்ள கிரிவலப் பாதையை வலம் வந்து ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. எனவே, மாதந்தோறும் பல லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், ஆவணி மாதப் பௌர்ணமி செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 05) மதியம் 12.16 முதல் புதன்கிழமை (செப்டம்பர் 06) காலை 10.02 மணிக்கு முடிவடைகிறது. எனவே, இந்த நேரத்தில் திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வரலாம் என்று ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. 

கிரிவலத்தை முன்னிட்டு சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து செவ்வாய்க்கிழமை காலை முதல் திருவண்ணாமலைக்கு பக்தர்களின் வசதிக்கேற்ப சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com