குருபலம் அல்லாத காலத்தில் திருமணம் நடைபெற்றால் ஏற்படும் பலன்கள்

கோச்சார முறையில் ஒரு தம்பதியர், ஜாதகத்தில் ஜனன ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியருக்கு...
குருபலம் அல்லாத காலத்தில் திருமணம் நடைபெற்றால் ஏற்படும் பலன்கள்

• கோச்சார முறையில் ஒரு தம்பதியர், ஜாதகத்தில் ஜனன ராசியில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால், அத்தம்பதியருக்கு சந்தான பாக்கியம் இருக்காது. ஒரு வேளை சந்தான பாக்கியம் ஏற்பட்டாலும் அச்சிசு சோரம், மரணம் அடையும் என்பது ஜோதிட சாஸ்திர விதியாகும்.

• ஜனன ராசிக்கு 2-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் தன தானிய சம்பத்து அடையப்பெறுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 3-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் வைதவ்வியம்/சோரம்/மரணம் அடையப் பெறுவர்.

• ஜனன ராசிக்கு 4-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் ஏட்டிக்குப் போட்டியாக குடும்பத்தில் குழப்பங்கள் ஏற்பட்டு வாழ்க்கை முழுவதும் அவதிப்படுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 5-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியருக்கு புத்திர பாக்கியம் அடையப்பெற்று, மகிழ்ச்சிகரமாக குடும்ப வாழ்க்கை அடையப்பெறுவர்.

• ஜனன ராசிக்கு 6-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் வைதவ்வியம்/சோரம்/வாழ்க்கை முழுவதும் அசுபப் பலன்களை அடையப்பெறுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 7-ம் இல்லத்தில் (களத்ரஸ்தானம்) குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர்/அப்பெண் தீர்க்க சுமங்கலி என்ற அமைப்பை அடையப்பெறுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 8-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் புத்திர பாக்கியமின்மை/ புத்திர சேதம் அடையப்பெறுவர்.

• ஜனன ராசிக்கு 9-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் அனைத்து சௌபாக்கியம் அடையப் பெறுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 10-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் புத்திர பாக்கியம் இருக்காது மற்றும் வாழ்நாள் முழுவதும் அசுபப் பலன்களையே அடையப்பெறுவர் என்பதாகும்.

• ஜனன ராசிக்கு 11-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் தனலாபம், சகல சம்பத்தும், அனைத்து சௌபாக்கியங்களும் அடையப்பெறுவர்.

• ஜனன ராசிக்கு 12-ம் இல்லத்தில் குருபகவான் சஞ்சரிக்கும் காலத்தில், ஜாதகருக்கு திருமணம் நடைபெற்றால் அத்தம்பதியர் புத்திரபாக்கியம் 100 சதவீதம் இருக்காது. மலட்டுத் தன்மை, கஷ்டமான குடும்ப வாழ்க்கை அடையப்பெறுவர் என்பதாகும்.

-ஜோதிடர் ஏ.கே.ஆறுமுகம்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com